மர்மமான முறையில் 10 மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதூர் வேலங்காடு தோட்டத்தில் மர்மமான முறையில் 10 மைல்கள் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மயில்களின் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தெரியவரும். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.