Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரிபட்டி ஏரியில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ராஜசேகர் பட்லப்பள்ளியில் இருக்கும் தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் துண்டுகள் கிடந்துள்ளது. எனவே ராஜசேகரை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |