Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சாலையோரம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி சாலையில் இருந்து சேத்தூர் செல்லும் சாலையில் முகத்தில் வெட்டு காயத்துடன் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது இறந்து கிடந்த பெண்ணிற்கு அருகில் மொபட் சாய்ந்து கிடந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சங்கரன்பாறையை சேர்ந்த தங்கராஜின் மனைவியான முத்துலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. தங்கராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் முத்துலட்சுமி தோட்டத்து வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் பெற்றோர் வீட்டிற்கு இரண்டு குழந்தைகளும் சென்றுள்ளனர். நேற்று காலை முத்துலட்சுமி மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்துள்ளார். எனவே முத்துலட்சுமி விபத்தில் இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |