இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி தெற்கு தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இதில் மணிகண்டன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால் சித்ரா தனது மாமியார் சுசிலாவோடு வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் சுசிலா தனது மருமகளை கடலை செடி பிடுங்குவதற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு சித்ராவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.