Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு… 50% இட ஒதுக்கீடு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக் கோரியும்; மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரணை நடத்தியது. இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளது.

Categories

Tech |