Categories
மாநில செய்திகள்

மருத்துவ காரணம், இறப்புக்கு…. இ-பதிவு கட்டாயம்…. முதல்வர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம்,அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் மருத்துவ காரணம் மற்றும் இறப்புக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் செல்ல இ-பதிவு கட்டாயமில்லை.

Categories

Tech |