வெங்கல் கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள பஜாரில் கிளினிக் ஒன்று சென்ற 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ராமச்சந்திரன் என்பவர் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது.
இதனால் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் ராமச்சந்திரன் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் தெர்மாமீட்டர் போன்ற கருவிகளை பறிமுதல் செய்து ராமச்சந்திரனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.