மருத்துவமனை கழிப்பறையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை சோனியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஜெயபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட ஜெயபால் மருத்துவமனை பொது வார்டில் இருக்கும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபாலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.