Categories
தேசிய செய்திகள்

மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா என்ற மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 3 சகோதரி களின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மூன்று சகோதரிகளும் சோனு, சாவித்திரி மற்றும் லலிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தங்கள் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மூவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காததால் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |