மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லால்பேட்டையில் கூலி தொழிலாளியான ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் விபத்தில் படுகாயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜாங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.