Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்ரமணிய நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் நடக்கும் கிரகப்பிரவேசத்திற்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பகலாயூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி வேப்ப மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த சண்முகசுந்தரம், உறவினரான சுரேஷ், அவரது மனைவி சுஜாதா, மகன் ஹர்ஷவர்தன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |