குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெக்கேரி கிராமத்தில் விவசாயியான பிரதீப்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதீப் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பிரதீப்புக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரதீப் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.