பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 26ஆம் தேதிஅடையாளம் தெரியாத 45 வயது ஆண் ஒருவர் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித் விவரங்கள் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார், எப்படி உயிரிழந்தார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.