Categories
மாநில செய்திகள்

மன வேதனை..! மாணவி சத்யபிரியா கொலை….. சதீஷை தூக்கில் போடனும்…. கொந்தளித்த கேப்டன்..!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். யாரிடமும் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் தங்கள் உயிருக்கு எந்தவித ஆபத்து ஏற்படாது என்பதை பெண் பிள்ளைகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவிகள் சுவாதி, ஸ்வேதா, சத்யபிரியா ஆகிய 3 பேரும் ரயில் நிலையங்களில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.” என்று வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி மாணவி சத்ய பிரியாவை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்ய பிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

2016 இல் சுவாதி 2021 இல் ஸ்வேதா தற்போது சத்யபிரியா என ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்த விதத்தில் நியாயம். இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |