திருநெல்வேலியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரி. இந்நிலையில் தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் சங்கரி மனமுடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் முருகேசன் கதறி அழுதார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.