Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி-மகள் தற்கொலை…. மன உளைச்சலில் மெக்கானிக் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டபள்ளியில் மெக்கானிக்கான பாஷா(43) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக பாஷாவின் மனைவியும், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |