Categories
தேசிய செய்திகள்

நீ உயிரோட இருக்காத, செத்துப் போ… மனைவி தூக்கு மாட்டிக் கொள்வதை… ரசித்து வீடியோ எடுத்த கல்நெஞ்ச கணவன்…!!!

ஆந்திராவில் மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்வதை கணவர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பென்சிலையப்பா. இவர் ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இவருடைய மனைவி கொண்டம்மா. பென்சிலயப்பா மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பென்சிலயப்பா மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அப்போது மனமுடைந்த கொண்டம்மா கணவரின் கண் முன்னரே மின்விசிறியில் தூக்கு மாட்டி உள்ளார். அதை சற்றும் பொருட்படுத்தாத பென்சிலையப்பா மனைவி தூக்கு மாட்டிக் கொள்வதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து மனைவி துடிதுடித்து இறப்பது வரை செல்போனில் பதிவு செய்துள்ளார் கொடூரமான எண்ணம் கொண்ட பென்சிலையப்பா. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். மனைவி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற போது அதனை தடுக்காமல் மனிதாபிமானம் இல்லாமல கணவன் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |