Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையை விட்டு சென்ற தாய்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கதறிய கணவன்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசம்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு லத்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனமுடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் சரவணன் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |