Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான குமரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தீராத வயிற்றுவலி காரணமாக குமரேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் குமரேசன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமரேசனின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |