Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரத் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |