அசாம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனிதக் குழந்தையைப் போலவே குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஆடு வளர்ப்பவர் கூறியது, ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆட்டுக்குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என்று கருதினோம்.
ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று ஆடு குட்டி போட்ட போது அது முழுசாக வளராத மனித குழந்தை போல் இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்டிற்கு இருக்கும் வால் இல்லை மற்றும் உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல் இருந்தது. ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தது. மேலும் இந்த ஆடு குட்டி பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.