Categories
மாநில செய்திகள்

மனிதநேயம் குறித்த சிறுவனின் பேச்சு…. வீடு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்…

பள்ளி மாணவன் அப்துல் கலாம் பெற்றோருக்கு கருணாநிதி நகர் சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேயம் மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் அப்துல்கலாம் மற்றும் அவரது பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சென்னை கலைஞர் கருணாநிதி சிவலிங்க பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.மனித நேயம் மத நல்லிணக்கம் குறித்து பள்ளி மாணவன் அப்துல் கலாமின் வீடியோ பலராலும் பகிரப்பட்டது.

மாணவனின் பேச்சிற்க்கு  காரணம் அவரது பெற்றோர், ஆசிரியர் பள்ளி நிர்வாகம் ஆகியோரும்  பாராட்டப்பட்டனர்.  ஆனால் சிறுவன் பிரபலம் அடைந்ததால் அவரது குடும்பம் தங்கியிருந்த வீட்டை உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தினார்கள். இதனால் அவர்கள் வேறு வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த 24.2.2022 அன்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவன்  அப்துல்கலாமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அந்த மாணவனின் பெற்றார்தில்ஷாத்பேகம், அஸ்மத்துல்லாஹ் ஆகியோர்  தாங்கள் சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்து  விட்டதாகவும் அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய வருமானம் இல்லை எனவும் இதுவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின்  வேண்டுகோளிற்கு இணங்கி  முதலமைச்சரின் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கியுள்ளார். ஒதுக்கீட்டு ஆணையினை பெற்றுக்கொண்டு மாணவன் பெற்றோர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை முதலமைச்சருக்கு  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |