வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷால்(23) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட விஷாலை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். நேற்று திடீரென விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஷால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.