மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும் என தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள் தயாராக இருக்க தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்..
அந்த கடிதத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் அமலாக்கம் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். திட்டங்களை அமலாக்கம் செயல்பாடுகள் குறித்து பவர்பாயிண்ட்டில் விவரங்களை தயார் செய்து வைத்து இருக்க வேண்டும். எப்போது ஆளுநரிடம் பவர்பாயின்ட் பிரசெண்டேஷன் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.