Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட்டில்…. சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.

மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவொன்றாக வாசிக்க தொடங்கியுள்ளார்.

அதில், 17000 கிராமப்புற 11,000 நகர்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும். நகர்புற தூய்மை திட்டத்துக்கு ரூபாய் 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூபாய் 5 லட்சம் கோடி ஒதுக்கீடு. உற்பத்தித் துறைக்கு ரூ 1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |