Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு துரோகம் செய்தது”… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்…!!

காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையையடுத்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துக்குரிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாளையுடன் 1 வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி பாரதி வீதி அலுவலகம் அருகே மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அப்போது, இந்த மாற்றங்களினால் காஷ்மீர் மக்கள் மற்றும் இந்திய மக்கள் பெரிதும் நன்மையை அடைவார்கள் என மத்திய அரசு ஏற்கனவே வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. ஆனால், ஓராண்டு நிறைவேறியும் அரசு அளித்த வாக்குறுதி படி ஏதும் செய்யாமல்  துரோகம் இழைத்தது  இப்போது  அம்பலமாகிவுள்ளது என  போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |