Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து அண்மையில் அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 38 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏழாவது ஊதியக்குழுவின் அடுத்த அகலவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகல விலைப்படி உயர்த்தப்படும். இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதிகப்படியான பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் மேலும் 4 சதவீதம் DA உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |