Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?… அதுவும் டபுள் சர்ப்ரைஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

குடியரசு தினத்துக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி வெளியாக காத்திருக்கிறது. என்னவென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, அரசு ஊழியர்களுக்கு Fitment factor விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. Fitment factor உயர்த்தப்பட்டாலே அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியமும் சேர்த்து உயர்ந்துவிடும். இதற்காக தற்போது உள்ள Fitment factor 2.57 விழுக்காட்டில் இருந்து 3.68 விழுக்காடாக உயர்த்தப்படவுள்ளது. இதன் விளைவாக அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியமானது 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயரும். இது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 8000 ரூபாய் அதிகரிக்கும்.

இது தொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்துக்கு முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமும், ஜூலை மாதமும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த வகையில் இம்மாதமே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அரசு ஊழியர்களுக்கு குறிந்தபட்ச ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு என 2 ஜாக்பாட் அறிவிப்புகள் இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |