பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்னும் திட்டத்தை 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வணிக வங்கிகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றது.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சிஷூ என்ற பெயரில் 50,000 வரையிலும் கிஷோர் என்ற பெயரில் 50000 முதல் 5 லட்சம் வரையிலும் தருண் என்ற பெயரில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கு இந்த திட்டத்தில் கடன் கிடைக்காது இந்த கடனுக்காக எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. அதாவது புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கின்றது.
விண்ணப்பத்தில் அடையாள சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம் இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களின் நிரப்ப வேண்டும் முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்திர அட்டை வழங்கப்படுகின்றது. இந்த அட்டையின் மூலப் பொருட்களை வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அட்டை மூலமாக கடன் தொகையில் 10 சதவிகிதம் அதிகபட்சம் ரூபாய் பத்தாயிரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த திட்டம் பொது மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.