மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. நிலக்கரி பற்றாக்குறையைப் போக்குவதற்கு முதல்வரின் வழிகாட்டுதலின்படி 4.8 டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும், அடுத்த ஆண்டு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.