நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.