Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்….. கல்வி அதிகாரி அதிரடி….!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பணியின் போது மது அருந்திவிட்டு பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது குற்றம் சாட்டினர். இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து வட்டார கல்வி அதிகாரி சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் தலைமை ஆசிரியர் சத்தியமங்கலம் அருகில் உள்ள கணபதி நகரிலுள்ள அரசு தொடக்க பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |