Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. 8 ஆயிரம் பேர் முன்பதிவு…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்யப்பட்டது. இதற்காக 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில் மதுரை மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக் கல்யாண நிகழ்வை காண 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்வை காண 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வரை 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |