Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மருத்துவமனையில் சிறப்பு வார்டு…. கொரோன வைரஸ் எதிரொலி…

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் எட்டு படுக்கைகளை கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது

கொரோன  வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளதால் உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட  கொரோன வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவினை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார்.

இங்கு கொரோன வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் கருவிகளுடன் இரு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |