Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை மக்களுக்கு அமைச்சர்  சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று  தொடங்கியுள்ளது. அப்போது 2022-2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்றைய தினமே  தாக்கல் செய்தார். இதையடுத்து மறுநாள் வேளாண்துறை துறைக்கு தனி பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டமானது நிறைவடைந்தது. இந்நிலையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி, தற்போது நடந்து வருகிறது. எனவே ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் விவாதத்துக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானியக்கோரிக்கை மீதான விவாதமானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகையை தொடர்ந்து 13, 14, 15 மற்றும் 16 என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்று  திங்கட்கிழமை அன்று  வருவாய் பேரிடர் துறை மீதான விவாதமானது நடைபெற்றது.

அப்போது ,சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் தளபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு, 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகளில் 307 படுக்கை வசதிகளுடன் 35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாகவும்  கூறினார். மேலும், இந்த ஆண்டே தங்கும் விடுதி கட்டித் தரப்படும் என கூறியுள்ளார்.  அவர், 307 படுக்கை வசதிகளுடன், வைஃபை வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தங்கும் விடுதியானது  அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |