Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே  ராமேஸ்வரம்-மதுரை, கொல்லம்-புனலூர், கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ஆகிய மூன்று வழித்தடங்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம்-மதுரை-ராமேஸ்வரம் ரயில் வருகின்ற 22-ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06652 கொண்ட ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு மதுரை வந்து சேரும். அதன் மறுமார்க்கத்தில் 06653 என்ற எண் கொண்ட மதுரை-ராமேஸ்வரம் ரயில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் பாம்பன், மண்டபம் கேம்ப், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதனைப் போல ராமேஸ்வரம்-கன்னியாகுமரி-ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும். இந்த ரயில் வருகின்ற திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

அதன் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிமை இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனையடுத்து கொல்லம்-புனலூர்-கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு ரயில் கொல்லத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் இருந்து புனலூர் கொல்லம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் புனலூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.5 மணிக்கு கொல்லம் வந்து சேரும். இந்த ரயில் அவனீஸ்வரர், குறி, கொட்டாரக்கரா, எழுகோன், குன்டாரா கிழக்கு, குன்டாரா சந்தன தோப்பு, கிளி கொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |