தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
இதற்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் தரவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். மேலும் உலகத்தரம் வாய்ந்த போதை பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான கோப்புகள் ஆடம்பர சுகாதார நிலையங்கள் புதுப்பிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்வதாக அமைச்சர் மன்சூக் கூறியுள்ளார். தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றியும் நான் கேட்டேன் அதற்கு தமிழகத்தில் மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தெலுங்கானா பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் மன்சுக் தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றிகளை கூறிக் கொள்கிறேன். இதனை அடுத்து மதுரை எய்ம்ஸ் தாமதம் ஏன் மதுரையின் தொடங்குவதில் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தின் காலதாமதத்தால் பணிகள் தாமதமாகி கொண்டிருக்கிறது எனவும் இரண்டு வாரத்திற்குள் ஒப்பந்தத்தில் அனைத்தும் விரைவு படுத்தப்பட்டு மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் இயங்கும் அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும் போது எதனால் தாமதமானது என மக்களுக்கு தெளிவாக விளக்கப்படும் இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை தமிழக மக்களுக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம் என்பதை மன்சுக் தெரிவித்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.