ராமநாதபுரத்திலுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி சென்ற ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராமநாதபுரத்திலுள்ள அரசுமருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ள சூழலில், மீதமுள்ள 50 இடங்களுக்கான அனைத்து வசதிகளும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 4 (நாளை) முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிடம் இல்லாத சூழலில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.