Categories
மாநில செய்திகள்

மதுரை ஆதீனம் மறைவு பேரிழப்பு…. ஓபிஎஸ் இரங்கல்….!!!!!!

மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார்.

இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் நேற்று இரவு முக்தி அடைந்த செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த துயரமும் அடைந்தேன். ஆன்மீகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |