Categories
மாநில செய்திகள்

மதுரை ஆதீனம் மறைவு…. எடப்பாடி பழனிசாமி இரங்கல்….!!!!

மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார்.

இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன், அவரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும். என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |