Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கார்த்திக் மது போதையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவதாபுரம் பகுதியிலிருக்கும் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |