அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சசிகலா, “மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.