நாட்டு வெடிகுண்டு வைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு கோட்டையூர் பகுதியில் விவசாயியான பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அங்கு பாலசுப்ரமணியன் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரின் சக்கரம் ஏறியதில் மண்ணுக்குள் மறைந்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பாலசுப்பிரமணியன் உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் கோட்டையூர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.