மணிப்பூர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம், ஹிங்கோரானி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் இந்த பயங்கரவாதிகள் குக்கி என்ற குழுவை சேர்ந்தவர்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.