Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மணற்பரப்பு பகுதிகளை மூடிய கடல் நீர்…. ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பொதுமக்கள்….!!!!

மணற்பரப்பு பகுதிகளை கடல் நீர் மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடற்கரை பகுதியில் விலாசமான மணற்பரப்பு உள்ளது. இதனால் தினம் தோறும் மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை பார்த்து ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு பகுதி முழுவதையும் கடல் நீர் மூடி உள்ளது. இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மணற்பரப்பு பகுதியை  கடல் நீர் மூடி இருப்பதை பார்த்து அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சிலர் தடுப்பு சுவர்களின் மீது அமர்ந்து கடலை பார்த்து ரசித்துள்ளனர்.

Categories

Tech |