Categories
தேசிய செய்திகள்

மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும்…. மராட்டிய அரசுக்கு கோரிக்கை…!!!!

மும்பையில் நேற்று நடைபெற்ற பேரணியின் போது உரையாற்றிய ராஜ் தாக்கரே மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும் என மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண்  சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஓலிக்கப்படுகின்றன…? இதை நிறுத்திவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் அனுமன் சாலிசா ஒலிபெருக்கிகள் ஒலிக்கும். “நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல எனவும் எனது சொந்த மதத்தில் பிரார்த்தனை செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது பிரிந்து சகோதரரும் மராட்டிய மாநில முதல் மந்திரியுமான உத்தவ் தாக்கரேவை தாக்கிய, ராஜ் தாக்கரே தேர்தலின்போது தன் எதிர்த்த சக்திகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களின் நம்பிக்கைக்கு முதல்-மந்திரி துரோகம் இழைத்து விட்டார் என கூறியுள்ளார். மேலும் மராட்டியத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது  உத்தவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், அவருக்கு முதல்-மந்திரியாகும் எண்ணம் வந்தது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சனைகளுக்காக மக்கள் போராடி வருகிறார்கள். அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்..?

மேலும் முஸ்லிம் வீடுகளில் உள்ள மதராசாக்கள் மீது சோதனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடுகளில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது மும்பை போலீசாருக்கு தெரியும்… நமது எம்.எல்.ஏ.க்கள் அவர்களை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார்கள், அப்படிப்பட்டவர்களிடம் ஆதார் கார்டு கூட இல்லை, ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அவற்றை உருவாக்குகிறார்கள்” என்று ராஜ்தாக்ரே கூறியுள்ளார்.

Categories

Tech |