மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப்பணியாளர்களாக 13,500 பேர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய அதிமுக அரசு அந்த 13,500 பேரையும் பணிநீக்கம் செய்தது. இது மக்கள் பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.