Categories
மாநில செய்திகள்

மக்கள் அலட்சியம்…. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் ஊரடங்கு …..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைய வில்லை. மக்களும் அலட்சியமாக வீட்டைவிட்டு வெளியே சுற்றித் திரிகின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள். அதனால் ஊர் அடைந்த இன்னும் கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |