இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதையும், மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தையும் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.