தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முதல் தவணை 2000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். ஜூன் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். ஜூன் 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் விநியோகம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.